ETV Bharat / state

பெரம்பலூருக்கு முதலமைச்சர் வருகை; பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், எம்எல்ஏக்கள்!

author img

By

Published : Nov 23, 2020, 2:11 PM IST

பெரம்பலூர்
பெரம்பலூர்

பெரம்பலூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தடுப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்ட விழா ஏற்பாடு பணிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆய்வுசெய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற 27ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா வைரஸ் வைரஸ் நோய்த்தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் வருகையையொட்டி மேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நவம்பர் 25ஆம் தேதி வருகை தருவதாக இருந்த நிலையில்,
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக விழாவின் தேதி மாற்றப்பட்டு 27ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.