ETV Bharat / state

வாகன தனிக்கை என்ற பெயரில் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 9:34 PM IST

namakkal-si-and-head-constable-suspended-for-bribe
பனியிடை நீக்கம்

நாமக்கல் அருகே வாகன தணிக்கை என்ற பெயரில் லஞ்சம் பெற்ற எஸ்.ஐ மற்றும் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் லஞ்சம் வாங்கிய காட்சிகள்

நாமக்கல்: திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமை காவலர் குணசேகரன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது போக்குவரத்து விதியை மீறி வாகனங்களில் பயணம் செய்ததாக சிலரை தடுத்து நிறுத்தி லஞ்சம் பெற்றுள்ளனர். அதனை சக வாகன ஓட்டி ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில்

வாகன தணிக்கை என்ற பெயரில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ சுந்தர்ராஜன் மற்றும் தலைமை காவலர் குணசேகரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க :INDIA alliance mumbai meeting: ஒரே சின்னம், ஒரே கொடி ஃபார்முலாவை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி? - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.