நாமக்கல்: ராசிபுரம் பட்டணம் சாலையில் நேற்று (ஜன.29) புதிதாகத் தனியாருக்குச் சொந்தமான ஒரு சிக்கன் கடை கடை திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று ஒரு நாள் மட்டும் 1 கிலோ சிக்கன் கறி வாங்கினால் 1/2 கிலோ சிக்கன் கறி இலவசம் என்று, போஸ்டரில் விளம்பரம் செய்யப்பட்டு ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் நேற்று அதிகாலை முதலே சிக்கின் கறி வாங்குவதற்குப் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
தற்போது 1 கிலோ சிக்கன் கறியின் விலை 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வரும் சூழ்நிலையில், 1/2 கிலோ சிக்கன் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்ததாகக் கருதப்படுகிறது. இந்த மெகா சலுகை விற்பனையில் சுமார் 3,000 கிலோ சிக்கன் விற்கப்பட்டுள்ளதாக கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் காதலால் 5 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்