ETV Bharat / state

துபாயில் மாயமான இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

author img

By

Published : Oct 29, 2021, 10:39 PM IST

உறவினர்கள் சாலை மறியல்
உறவினர்கள் சாலை மறியல்

துபாயில் பணியாற்றிய இளைஞர் ஆறு மாதங்களுக்கு முன் மாயமான நிலையில், தற்போது உயிரிழந்துவிட்டதாக வந்த தகவலால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் உள்ள இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் இவரின் மகன் பிரபாகரன் (21).அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் துபாயில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிறுனத்தில் பணியாற்றுவதற்காக பிரபாகரன் கடந்த 2019 ஆம் ஆண்டு துபாய் சென்றுள்ளார்.

அங்கு பணியாற்றி வந்த நிலையில் கடந்த மே மாதம் வீட்டிற்கு தொலைபேசி மூலம் பேசிய பிரபாகரன் நிறுவனத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டியதால் தன்னை நிறுவனத்தினர் சாப்பாடு, சம்பளம் கொடுக்காமல் கொடுமைபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதே மாதம் 21ஆம் தேதி பிரபாகரன் பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரபாகரன் குடும்பத்தாரிடம், ‘பிரபாகரனை காணவில்லை’ என தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபாகரனின் உறவினர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் தூதரகம், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பிரபாகரனை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.


ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது ’பிரபாகரன் இறந்துவிட்டதாக’ தகவல் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரனின் உறவினர்களும், கிராம மக்களும் பட்டவர்த்தி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்த மணல்மேடு காவல்துறையினர், பிரபாகரனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:ரஜினி மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு - அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.