ETV Bharat / state

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!

author img

By

Published : Jan 24, 2022, 1:51 PM IST

nagapattinam-fisherman-attack
nagapattinam-fisherman-attack

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் : வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த நாகமணி என்பவரின் பைபர் படகில் பன்னீர்செல்வம், நாகமுத்து, ராஜேந்திரன் ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று(ஜன.24) மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் மூவரும் நேற்று இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மூன்று பேர் நாகமணியின் படகில் ஏறி மீனவர்களை பயங்கிற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

காயத்துடன் கரை திரும்பிய மீனவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவதுறையினரும், மீன்வளத்துறை அலுவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை - காவல்துறையினர் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.