ETV Bharat / state

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை - காவல்துறையினர் விசாரணை!

author img

By

Published : Jan 23, 2022, 8:07 PM IST

ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு அவரது நண்பரே கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை

செங்கல்பட்டு: கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர், தன்னுடன் ஆம்புலன்ஸ் ஓட்டும் அஜித், தர்மதுரை, ராஜா ஆகிய மூன்று நண்பர்களுடன், செங்கல்பட்டு பெரியார் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.

இதில் தொழில் காரணமாக விஜயகுமாருக்கும், அஜித்துக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு நண்பர்களுடன் தங்கியிருந்த விஜயகுமார் தலையில் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த செங்கல்பட்டு காவல்துறையினர் விஜயகுமாரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : மக்காச்சோள தோட்டத்தில் கஞ்சா செடி: விவசாயி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.