ETV Bharat / state

"இலவச வீட்டுமனைப் பட்டா மோசடி" - நாம் தமிழர் கட்சி நிர்வாகி அதிரடி கைது

author img

By

Published : Feb 22, 2023, 6:40 AM IST

"இலவச வீட்டுமனை பட்டா மோசடி"- நாம் தமிழர் கட்சி நிர்வாகி அதிரடி கைது
"இலவச வீட்டுமனை பட்டா மோசடி"- நாம் தமிழர் கட்சி நிர்வாகி அதிரடி கைது

இலவச வீட்டுமனைப் பட்டா வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 8 லட்சம் மோசடி செய்த நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த பழையாறு மீனவ கிராமத்தில் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2006ஆம் ஆண்டு சுனாமியின்போது கிராமத்தில் வசித்த மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்ட நிலையில் எஞ்சி இருந்த இடங்களை தற்போது வீடில்லாத மக்களுக்கு வீட்டுமனையாகப் பிரித்து வழங்க வேண்டும் என கிராமத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கிராமத்தில் உள்ள மீனவ மக்களிடம் வீட்டு மனைக்கு இலவச பட்டா வாங்கி தருவதாகக் கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறையின் மாவட்ட பொறுப்பாளர் செண்பகசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த செண்பகசாமியின் நண்பர் அண்ணாதுரை ஆகியோர் 40க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.20,000 பெற்றுள்ளனர்.

கிராமத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே நிலத்தை வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்ட நிலையில் தனி நபர்கள் கிராம மக்களை ஏமாற்றி சிலருக்கு போலி பட்டா வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்படி இரண்டு நபர்களால் பாதிக்கப்பட்ட மக்கள், கிராமத்தினரிடம் முறையீடு செய்ததால் மேற்கண்ட இருவரை கைது செய்ய வலியுறுத்தி பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலியாக பட்டா தயார் செய்ததாக நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் செண்பகசாமியை புதுப்பட்டினம் போலீசார் அதிரடியாக கைது செய்து சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர், நீதிபதி 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:"100 நாள் வேலைத்திட்டம் முடங்க வாய்ப்புள்ளது" - ஆய்வில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.