ETV Bharat / state

இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சிறை

author img

By

Published : May 11, 2021, 3:10 PM IST

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சிறை
சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சிறை

நாகப்பட்டினம்: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர், கீழத்தெருவைச் சேர்ந்தவர் குமார் மகன் பாலமுருகன் (22). ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், மயிலாடுதுறை நர்சிங் கல்லூரியில் பயின்ற 17 வயது இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்து, கடந்த 8ஆம் தேதி மயிலாடுதுறைக்கு வந்த இளம்பெண் வீடு திரும்பாத நிலையில், சந்தேகமடைந்த அவரது பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலமுருகன் என்பவர் தங்களது மகளை கடத்திச் சென்றதாகப் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல் துறையினர், உறவினர் வீட்டில் தங்கியிருந்த பாலமுருகனை கைது செய்ததுடன், இளம்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பாலமுருகனை போக்சோ மற்றும் குழந்தைகள் திருமணத் தடை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தவறு செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.