ETV Bharat / state

காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது...

author img

By

Published : Sep 14, 2019, 7:59 PM IST

நாகை: காதலை ஏற்க மறுத்ததால் பிளஸ் 2 மாணவிக்கு கட்டாயமாக தாலி கட்டிய கொத்தனாரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவி

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஆலங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன்(26). இவர் கொத்தனார் வேலை பார்த்துவருகிறார். குத்தாலத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவரும் மாணவி ஒருவரை கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கு மாரீஸ்வரன் தன்னை பின்தொடர்வது பிடிக்கவில்லை.

ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் எப்படியாவது மாணவியை வாழ்க்கை துணையாக கரம்பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 10ஆம் தேதியன்று குத்தாலம், கோமல் சாலையில் வைத்து அவருக்கு மாரீஸ்வரன் தாலி கட்டிவிட்டார்.

அப்போது அந்த மாணவி சத்தம் போடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாரீஸ்வரனை விரட்டினர். பின்னர், இது குறித்து மாணவியின் பெற்றோர் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மாரீஸ்வரனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Intro:குத்தாலம் அருகே பிளஸ் 2 மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய கொத்தனார் கைது:-
Body:நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஆலங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(26). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். குத்தாலத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கு மாரீஸ்வரன் தன்னை பின்தொடர்வதில் விருப்பம் இல்லை. இதனால் வெறுப்படைந்த மாரீஸ்வரன், எப்படியும் அந்த மாணவியை அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த மாணவிக்கு தாலி கட்டிவிட்டால் தனக்கு எப்படியும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், கடந்த 10-ஆம் தேதியன்று, குத்தாலம் கோமல் சாலையில் நடந்து சென்ற மாணவியை கட்டிப்பிடித்து கழுத்தில் தாலியை கட்டி விட்டார். இதில் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து சத்தம் போடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாரீஸ்வரனை விரட்டினர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் ;தொடர்ந்து மாரீஸ்வரனை குத்தாலம் போலீசார் கைது செய்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரனை போலீசார் சிறையிலடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.