ETV Bharat / state

நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான வழக்கு ரத்து!

author img

By

Published : Nov 20, 2019, 10:19 PM IST

நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான வழக்கு ரத்து!

மதுரை: நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"என் மீது மோசடி வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சபாபதி என்ற தனிநபர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் 2014இல் நடைபெற்ற மக்களவை தேர்தல் செலவுக்காக அவரிடம் நான்கு கோடியே 97 லட்சத்து 90 ஆயிரத்து 700 ரூபாய் வாங்கியதாகவும், அதில் இரண்டு கோடியை திரும்ப வழங்கியதாகவும், மீதிப்பணத்தை வழங்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் சபாபதி கூறியுள்ளார்.

இதே கோரிக்கைக்காக சபாபதி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது. இதை மறைத்து மீண்டும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர் தனிநபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதனால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நத்தம் விஸ்வநாதன் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!

Intro:நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"
என் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சபாபதி என்ற தனி நபர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் செலவுக்காக அவரிடம் 4 கோடி 97 லட்சத்து 90 ஆயிரத்து 700 வாங்கியதாகவும், அதில் 2 கோடியை திரும்ப வழங்கியதாகவும், மீதிப்பணத்தை வழங்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் சபாபதி கூறியுள்ளார்.
இதே கோரிக்கைக்காக சபாபதி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது. இதை மறைத்து மீண்டும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர் தனிநபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதனால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்"
என கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நத்தம் விஸ்வநாதன் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.