ETV Bharat / state

பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!

author img

By

Published : Nov 20, 2019, 4:46 PM IST

கன்னியாகுமரி: அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரை ஓட்டுநர் தரக்குறைவாக பேசியதால், பொதுமக்கள் அப்பேருந்தை சிறைபிடித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தன் துறை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாகர்கோவிலில் இருந்து புத்தன் துறை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அவர் ஏறுவதற்கு காலதாமதமானதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அப்பெண்ணை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் ஊர் மக்களிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்தப் பேருந்து புத்தன்துறை கிராமத்திற்கு சென்றபோது ஊர்மக்கள் திரண்டு பேருந்தை சிறைபிடித்தனர்.

பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பெண்ணை தரக்குறைவாக பேசிய ஓட்டுநர் மாணிக்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து மாணிக்கம் அப்பெண்ணிடமும், பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அங்கிருந்து பேருந்தை எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஈத்தாமொழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் காயம்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து புத்தன்துறை கடற்கரை கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரை ஓட்டுனர் தரக்குறைவாக பேசியதால் கோபம் அடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்தனர். இது குறித்து ஈத்தாமொழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தன்துறை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று நாகர்கோவில் இருந்து புத்தன் துறை செல்லும் பேருந்தில் ஏறினார். அவர் ஏறுவதற்கு காலதாமதமானதை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் அந்த பெண்ணை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் ஊர் மக்களிடம் செல்போனில் தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து அந்தப் பேருந்து புத்தன்துறை கிராமத்திற்கு சென்றபோது ஊர்மக்கள் திரண்டு பேருந்தை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெண்ணை ஆபாசமாக பேசிய டிரைவர் மாணிக்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து டிரைவர் மாணிக்கம் அந்த பெண்ணிடமும் பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்டார். இதனை தொடர்ந்து பேருந்தை அங்கிருந்து செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஈத்தாமொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.