ETV Bharat / state

மதுரை எய்ம்ஸ்க்கு ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கவில்லை - ஆர்டிஐயில் வெளியான அதிர்ச்சி தகவல்!

author img

By

Published : Dec 1, 2022, 12:19 PM IST

மதுரை எய்ம்ஸ்க்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை - ஆர்டிஐயில் வெளியான அதிர்ச்சி தகவல்!
மதுரை எய்ம்ஸ்க்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை - ஆர்டிஐயில் வெளியான அதிர்ச்சி தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நிறுவனம் இதுவரை நிதி ஒதுக்கவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை: தோப்பூர் அருகே மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு வகையில் போராட்டங்கள், ஆதரவுக் குரல்கள் எழுந்து வந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை, மதுரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆவணம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆவணம்

அந்த பதிலில், “திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடி ஆகும். இதில் ஜப்பான் நிறுவனமான ஜைகாவே 82 விழுக்காடு நிதியை வழங்குகிறது.

அதாவது ஜப்பான் நிறுவனமான ஜைகா ரூ.1621.8 கோடியும், மீதமுள்ள 18 சதவீத நிதியை மத்திய அரசும் வழங்க உள்ளது. ஜைகா நிறுவனம் இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை” என தெரிய வந்துள்ளது.

ஆனால் மத்திய அரசு 2026ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் நிறைவு பெறும் என அறிவித்திருந்தும்கூட, ஜைகா நிறுவனம் நிதி ஒதுக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'வரும் 2026-ல் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும்' - மத்திய அரசு அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.