ETV Bharat / state

சனாதனத்தைப் பற்றி திமுகவிற்கு என்ன தெரியும்? - டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 8:56 PM IST

puthiya tamilagam
புதிய தமிழகம் கட்சி

One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தக்கோரியும், நாங்குநேரி சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமி பேட்டி

மதுரை: மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் (Puthiya Tamilagam) சார்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “திமுக அரசு மதுவிலக்கைக் கண்டு கொள்வதில்லை எனவும், இதனால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள் எனவும், மதுவிலக்குக்கு எதிராக தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு புதிய தமிழகம் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இடையே சாதிய மனப்பான்மை மேலோங்கி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளக்கூடிய வகையில் மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது என்றார். திருநெல்வேலி நாங்குநேரியில் சமீபத்தில் பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரி சக மாணவர்களால் தாக்கப்பட்டார்கள். அந்த இருவரும் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையும், நீதிமன்றமும் அனுமதி வழங்க மறுத்து வருகிறது.

நாங்குநேரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் தனது கட்சி சார்பாக வழக்கு தொடர்ந்து உள்ளோம். நாங்குநேரி மாணவன் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி என யாரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, அறிக்கை மட்டும் தான் வெளியிட்டுள்ளார்கள். இந்த சம்பவ பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள். தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

  • மதுரையில் தலைவர் @DrKrishnasamy அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் புதிய தமிழகம் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்.! pic.twitter.com/4TJsftcWTH

    — Puthiya Tamilagam (@PTpartyOfficial) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழகத்தில் ஆதீனங்கள் மடாதிபதிகளின் சொத்துக்களை ஆய்வு செய்து, நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கி விவசாயத்தைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட முடியும். வானமாமலை கோயிலில் தலைவிரித்தாட கூடிய சாதி வெறியை அடக்க வேண்டும். அங்கு நடக்கக்கூடிய சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கண்டிப்பாக விரைந்து அமல்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகிய தேர்தல்களை ஒரே கட்டத்தில் நடத்த வேண்டும். அமெரிக்காவைப் போல நான்கு ஆண்டு ஆட்சி முறை கொண்டு வர வேண்டும். விகிதாச்சார தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்றால் என்ன என்பதை தெரியாமல் பேசுகிறார். சனாதனத்தையும் சமூக நீதியையும் அழித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குள் ஒரு மக்களை அழைத்துச்செல்லுங்கள் பார்ப்போம். சனாதனத்தின் அர்த்தம் வேறு அதை மக்களிடத்தில் இவர்கள் தவறாக கொண்டு செல்கிறார்கள்.

நாங்குநேரி சம்பவத்திற்கு திமுகவின் கண்டனம் எங்கே? உதயநிதியின் கண்டனம் எங்கே? தமிழ்நாட்டில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன அதில், 32 சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டன. இதில் வசூலிக்கும் பணம் எங்கு செல்கிறது? சுங்கச்சாவடிகள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து யாரும் வாய் திறப்பதில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'இன்பநிதி பாசறை' போஸ்டர் அடித்த திமுக நிர்வாகிகள் நீக்கம்.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.