ETV Bharat / state

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு... தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாட் நியூஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 12:08 PM IST

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இனி சாத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இனி சாத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

Antyothaya Express: மதுரை கோட்ட பகுதியில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சாத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை: ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், "மதுரை கோட்ட பகுதியில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் சாத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

அந்தியோதயா ரயில்: நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா ரயில் மற்றும் தாம்பரம் செல்லும். அந்தியோதயா ரயில் ஆகியவை முறையே காலை 9.32 மணிக்கும் மாலை 6.18 மணிக்கும் சாத்தூரில் இருந்து புறப்படும். இதேபோல மதுரை - புனலூர் - மதுரை ரயில்கள் (16729/16730) சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

அதன்படி புனலூர் செல்லும் ரயில் சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 12.30, 12.48 மணிக்கு புறப்படும். மதுரை செல்லும் ரயில் இந்த ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 1.22, 1.40 மணிக்கு புறப்படும். மேலும் திருச்சி - ராமநாதபுரம் - திருச்சி ரயில்கள் (16849/16850) கீரனூர் ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும்.

நடைமுறையில் எப்போது? : ராமநாதபுரம் செல்லும் ரயில் காலை 7.28 மணிக்கும் திருச்சி செல்லும் ரயில் இரவு 7.01 மணிக்கும் கீரனூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். இந்த கூடுதல் நிறுத்தங்கள் செப்டம்பர் 20 முதல் அமலுக்கு வருகிறது. மண்டபம் - அஜ்மீர் - மண்டபம் ஹம்சபார் விரைவு ரயில்கள் (20973/20974) புதுக்கோட்டை, ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

செப்டம்பர் 23 முதல் மண்டபம் செல்லும் ரயில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் இருந்து முறையே மாலை 04.00, 06.45 மணிக்கு புறப்படும். செப்டம்பர் 26 முதல் அஜ்மீர் செல்லும் ரயில் ராமநாதபுரம், புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 11.45 மணிக்கும் அதிகாலை 01.50 மணிக்கும் புறப்படும். மேலும் மண்டபம் - அயோத்தியா - மண்டபம் ஷிரத்தா சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராமநாதபுரம், காரைக்குடி ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

செப்டம்பர் 24 முதல் அயோத்தியா செல்லும் ரயில் ராமநாதபுரம், காரைக்குடி ரயில் நிலையங்களில் இருந்து முறையே நள்ளிரவு 12.50 மணிக்கும் அதிகாலை 03.00 மணிக்கும் புறப்படும். செப்டம்பர் 20 முதல் மண்டபம் செல்லும் ரயில் காரைக்குடி, ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் இருந்து இரவு 11.10 மணிக்கும் அதிகாலை 01.25 மணிக்கும் புறப்படும் ” என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: "உதயநிதிக்கு கச்சத்தீவு ஸ்பெல்லிங் தெரியுமா.?" - சி.வி.சண்முகம் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.