ETV Bharat / state

ஒரு மாதத்தில் திருமணம்...  கோயிலுக்கு சென்ற ஜோடிக்கு நேர்ந்த சோகம்...

author img

By

Published : Apr 22, 2022, 6:20 PM IST

Marriage couple
Marriage couple

அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் மணமக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் கிராமத்தை சேர்ந்த சிவா (21) என்பவருக்கும், தேன்கனிகோட்டையைச் சேர்ந்த அபி (18) என்பவருக்கும், அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, இருவரும் ஜிமநத்தம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றுள்ளனர். அப்போது, கோயிலுக்கு அருகில் உள்ள குட்டையில் கால் நனைக்க அபி இறங்கியுள்ளார்.

அப்போது தவறி குட்டையில் விழுந்தார். இதனைக் கண்ட சிவா, அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது இருவரும் தண்ணீர் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடல்களை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நிச்சயமாகியிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கு - புலனாய்வு குழுவுக்கு கிடைத்தது புதிய துப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.