ETV Bharat / state

காதல் கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!

author img

By

Published : Jun 7, 2022, 9:37 AM IST

ஓசூரில் குடும்ப தகராறில் காதல் கணவரை மனைவியே பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி
ஓசூரில் குடும்ப தகராறில் காதல் கணவரை மனைவியே பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி

ஓசூரில் குடும்ப தகராறில் காதல் கணவரை மனைவியே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பின்புறம் வசித்து வருபவர் கார்த்திக். இவர் கட்டுமான பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். அவரது மனைவி சந்தியா, இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சந்தியா, கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாக கூறப்படுகிறது.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த கார்த்திக்-ஐ அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவத்தில் சந்தியாவிற்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் மனைவி சந்தியா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மகன் இறந்த சோகத்தால் தாய், தந்தை தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.