ETV Bharat / state

முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் அபராதம் வசூல்!

author img

By

Published : Apr 12, 2021, 6:18 PM IST

hosur
hosur

கிருஷ்ணகிரி: ஓசூரில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 8 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டிருப்பதாக ஓசூர் மாநாகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி தமிழ்நாடு - கர்நாடக எல்லையாக இருக்கிறது. இங்கு வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தினம் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி மாநகராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் ஓசூர் மாநகர பேருந்து நிலையம், உழவர் சந்தை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் தலா 200 ரூபாய் என அபராதம் விதித்து வசூலித்து வருகின்றனர். இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 8 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.