இளைஞர் வெட்டி கொலை - காவல் துறை விசாரணை

author img

By

Published : Aug 30, 2021, 6:14 PM IST

இளைஞர் வெட்டி கொலை

கரூர் லாலாப்பேட்டை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கரூர்: மேட்டுமகாதானபுரத்தைச் சேர்ந்தவர் ரவுடி அருண்குமார் (22). இவர் மீது லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவரை நேற்று (ஆக. 29) இரவு 9 மணியளவில் கீழசிந்தலாவடி ஊரின் நடுப்பகுதியில் வைத்து, அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாலாப்பேட்டை காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், விசாரணை மேற்கொண்டார். பின்னர், குளித்தலை டிஎஸ்பி தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.