ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கொலை

author img

By

Published : Aug 30, 2021, 11:38 AM IST

இளைஞர் கொலை
இளைஞர் கொலை

போடிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் போடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் ரமேஷ் தனியார் சி.என்.சி தொழிற்சாலையில் பணியாற்றினார். ரமேஷ் நேற்று (ஆகஸ்ட் 30) இரவு தனது நண்பர்களைப் பார்த்து விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் பாலக்காடு எல்&டி பைபாஸ் வழியாக வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது போடிபாளையம் அருகே இவர், இருசக்கர வாகனத்தை வழி மறித்து அடையாளம் தெரியாத நபர்கள் ரமேஷை அரிவாள் வெட்டினர்.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுக்கரை காவல் துறையினர் ரமேஷ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அதேபகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் போதை மருந்து பயன்படுத்தும் கும்பல்களுக்கு இவருக்கும், இடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.