கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் முன்னாள் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ காமராஜின் வழக்கறிஞர் வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபர் வந்து நோட்டமிட்டுள்ளார். அந்த சிசிடிவி காட்சியை வைத்து வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அந்த சிசிடிவி சாட்சி சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் அதே பகுதியில் இன்று (செப்.2) காலை சுற்றித்திரிந்த அதே நபரை பொதுமக்கள் பிடித்து வாகனத்தில் கட்டி வைத்தனர். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே, இவர் காவல் நிலையத்தில் இருந்த லத்தி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றுள்ளார். எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வாகனத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நபரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: நெஞ்சை உலுக்கிய கொடைக்கானல் சம்பவம் - வீடியோ வெளியிட்ட நபர் கைது