ETV Bharat / state

கரூரில் பெண்ணிடம் அத்துமீறிய கந்து வட்டி கும்பல்.. 2 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 4:09 PM IST

sexually harassed woman in Karur
கரூரில் பெண்ணிடம் எல்லை மீறிய கந்து வட்டி கும்பல்.. 2 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..

sexually harassed woman in Karur: கரூர் அருகே கந்து வட்டி கும்பல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணை வழிமறித்து நடுரோட்டில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கந்து வட்டி கும்பல் தாக்குதல்

கரூர்: வெள்ளியணை அருகே உள்ள தாளியாபட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பட்டியல் சமூக சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கலப்புத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கரூர் காமராஜபுரத்தில் இயங்கி வரும் பாலு பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் தனது குடும்ப செலவிற்காக ரூ.60,000 கடன் பெற்று 10% வட்டியும் செலுத்தி வந்துள்ளார்.

அதிக வட்டியாக இருந்தாலும் தனது குடும்பத் தேவைக்காக பெற்ற கடன் என்பதால் தவணைத் தொகையை செலுத்தி வந்த நபர் திடீரென வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் ஓய்வில் இருந்துள்ளார் இதன் காரணமாக வருவாய் இழப்பு ஏற்படவே கடனுக்கான வட்டி தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது.

கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையைக் கேட்டு நிதி நிறுவனம் சார்பில் தினந்தோறும் தொலைப்பேசி மூலமாகவும் நேரில் சென்று கடனை கராராக வசூல் செய்ய அழுத்தம் கொடுத்ததினால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், வெள்ளியணை காவல் நிலையத்தில் கடன் வாங்கிய நபர் மற்றும் அவரது குடும்பத்தார் நிதி நிறுவனத்திடம் இருந்து ஒரு மாத காலம் அவகாசம் பெற்றுள்ளனர்.

பின்னர் கடனை திரும்பச் செலுத்துவதற்காகக் கரூரில் உள்ள டெக்ஸ்டைல் ஒன்றில் டெய்லராகவும் அவரது மனைவி மற்றொரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பேக்கிங் செய்யும் வேலையும் செய்து வந்துள்ளனர். இதனிடையே நபரின் குடும்ப சூழ்நிலை காரணமாக கடன் தொகையைச் செலுத்த முடியாத நிலையில் கடனுக்கான கொடுக்கப்பட்ட அவகாச காலம் முடிந்து விட்டதால் மீண்டும் நிதி நிறுவனத்தினர் ஆட்களை அனுப்பி தினந்தோறும் கடன் தொகையைச் செலுத்தக் கோரி தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஆத்திரமடைந்த நிதி நிறுவனத்தினர் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை கடன் வாங்கிய நபரின் மனைவி பணி முடித்து மாலை 6 மணி அளவில் வீடு திரும்பிய போது அவரை வழிமறித்து நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இளவரசன், பாலசுப்பிரமணியன், சந்தோஷ், பொன்னுசாமி உள்ளிட்ட நான்கு பேர் நடுரோட்டில் கையைப் பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதனை எதிர்ப்பாக்காத அந்த பெண் எதிர்வினையாற்ற முற்பட்ட பொழுது அவரை மானபங்க படுத்தி தாக்கியதுடன் அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று அங்கு சரமாரியாகத் தாக்குதல் நடத்தி பாலியல் தொந்தரவும் செய்துள்ளனர்.

பின்னர் நபரை செல்போன் மூலம் அழைத்து கடன் தொகையைச் செலுத்தாவிட்டால் மனைவியை வீட்டுக்கு அனுப்ப முடியாது எனக்கூறி அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளனர் இதனைத் தடுக்க முற்பட்ட போது வயிற்றில் எட்டி உதைத்துத் தாக்கியுள்ளனர்.

இரவு 9 மணிக்கு மேல் பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த தாலி சங்கிலி, செல்போன் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு நிதி நிறுவனத்தில் இருந்து அவரை துரத்தியுள்ளனர். நிதி நிறுவன கும்பலிடம் இருந்து தப்பித்தால் போது என்று வீட்டுக்குச் சென்று நடந்தவற்றைக் கூறி மயக்கமடைந்த நிலையில் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது தொடர்பாக ஈ டிவி பாரத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், "தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்தார் தனது கணவர் பெற்ற பணத்திற்கு தன்னை நடுரோட்டில் தாக்கி பாலியல் துன்புறுத்தியவர்களை போலீசார் கைது செய்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இதனிடையே பாலு பைனான்ஸ் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சந்தோஷ் ஆகிய இரண்டு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் கரூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்வேயருக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டும்..? அரசுக்கு கடிதம் எழுதிய ஆர்டிஐ ஆர்வலர் - வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.