ETV Bharat / state

கரூரில் லாரி - டெம்போ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 6, 2023, 10:00 AM IST

Etv Bharatகரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் லாரி மீது டெம்போ வேன் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு
Etv Bharatகரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் லாரி மீது டெம்போ வேன் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

கரூரில் மினி டெம்போ வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

கரூர்: திருச்சி நெடுஞ்சாலையில் மாயனூர் அருகே மினி டெம்போ வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உடல் நசுங்கி இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று (ஜனவரி 5) நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் சரவணன்(32), அதே பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் மாரியப்பன்(30) இருவரும் டாட்டா ஏஸ் மினி டெம்போ லோடு வாகனத்தில் காங்கேயம் நோக்கி சென்றனர்.

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே வாய்க்கால் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து அரியலூர் பகுதிக்கு சாக்குபைகள் ஏற்றி சென்ற லாரி நேருக்கு நேர் மோதியதில் சரவணன் (32) , மாரியப்பன்(30) இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தினால் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்கு போராடிய காகம் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.