தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் பேரணி சென்றபோது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தேசபிதா காந்தியடிகள், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில் அகிம்சை, சத்தியம், சமத்துவம், சேவை, ஏழை மக்களுக்கு உதவுவது, எளிமையாக வாழ்வது உள்ளிட்ட தத்துவங்களை வலியுறுத்தி இந்தப் பேரணியை நடத்தியுள்ளோம். மகாத்மா காந்தி இந்தியாவிற்கான தலைவர் மட்டுமல்லை அவர் உலகத்திற்கான தலைவர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவின் தந்தை மோடி என கூறியிருக்கிறார். அவருக்கு இந்திய வரலாறோ, உலக வரலாறோ, ஏன் அமெரிக்க வரலாறு கூட அவருக்குத் தெரியாது.
இந்த விவகாரத்தில் மோடி அவர்கள் நான் தேசப்பிதா இல்லை, காந்தி தான் தேசப்பிதா எனக் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் அவருக்கு பெருமை கிடைத்திருக்கும்.
பாரதீய ஜனதா கட்சி மகாத்மா காந்தியடிகளுக்கு செய்யும் நினைவுகள் அனைத்தும் பொய்யானவை. ஏனென்றால் காங்கிரஸுக்கும் காந்திக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு. ஆனால் காந்திக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இருக்கும் உறவு, துப்பாக்கி தோட்ட உறவு " என்றார்.
இதையும் படிங்க: 'ட்ரம்பிற்கு இந்திய நாட்டின் வரலாறு தெரியாததால் மோடியை புகழ்ந்துள்ளார்' - கே.எஸ்.அழகிரி