கன்னியாகுமரி: நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவில் இருந்து ஆரல் வாய்மொழி நோக்கி மேக்கா மண்டபத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வராஜ்(50) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதேபோல திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது.
இந்நிலையில் தோவாளை அருகே மங்கம்மா சாலையில் அருகே பேருந்தும், இருசக்கர வாகனமும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த செல்வராஜ் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரல் வாய்மொழி காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி: சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதிய பைக்