ETV Bharat / state

பாலியல் தொழிலில் ஈடுபட்ட மனைவி கொலை - கணவர், தோழி கைது

author img

By

Published : Apr 27, 2022, 10:09 PM IST

பாலியல் தொழிலில் ஈடுபட்ட மனைவி கொலை
பாலியல் தொழிலில் ஈடுபட்ட மனைவி கொலை

பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மனைவியை, தனது திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் பெண்ணுடன் சேர்ந்து கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தெரசாபுரம் கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் சடலம் இருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், உடற்கூராய்வில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்துகிடந்த பெண் ராணிபேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தைச் சேர்ந்த பிரியா (23) என்பதும் இவர் பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

அதன் பிறகு பிரியாவின் காதலன் வெங்கடேசன் மற்றும் பாலியல் தொழில் தரகராக இருந்து வந்த ஜோதி ஆகியோரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலையுண்ட பிரியாவுக்கு காஞ்சிபுரம் ஓரிக்கை அன்னை சத்யா தாஸ் நகரைச் சேர்ந்த நவீன் (22), என்பவருடன் காதல் ஏற்பட்டு இளம் வயதிலே அவர்களுக்கு திருமணம் முடிந்துள்ளது.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து சில மாதங்களில் இறந்துவிட்டது. இதன் பிறகு பிரியாவின் கணவன் நவீனுக்கும், காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த கல்பனா (32) என்ற கஞ்சா வியாபாரி பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்ட நிலையில் பிரியாவை விட்டு நவீன் பிரிந்து தனியாக சென்றார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

அதன் பிறகு பிரியா, பெண் இடைதரகரான ஜோதி என்பவர் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். மேலும், கஞ்சா போதைக்கும் அடிமையான பிரியா தன்னை கைவிட்டுச் சென்ற கணவன் நவீனை பொது இடங்களில் பார்க்கும்போதெல்லாம் அவமதிக்கவும் செய்துள்ளார்.

இது தவிர நவீனுடன் திருமணத்தை மீறிய உறவிலுள்ள கஞ்சா வியாபாரி கல்பனா அவரது தம்பி காளிதாஸ் ஆகியோர் காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பது தொடர்பாக காவல் துறையினருக்கு பிரியா தகவல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கல்பனா, காளிதாஸ் கைதாகி சில மாதங்களுக்கு முன்பு சிறைக்குச் சென்றனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த கல்பனா, நவீனுடன் சேர்ந்து பிரியாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, பிரியாவிடம் சமாதானம் பேசுவதற்காக கடந்த 17ஆம் தேதி காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துள்ளனர். அப்போது பிரியா அவரது கணவன் நவீன், கல்பனா ஆகிய மூவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி, கஞ்சா புகைத்துள்ளனர்.

பின்னர் நவீனும், கல்பனாவும் சேர்ந்து பிரியாவை அடித்து துன்புறுத்தி ஒருக்கட்டத்தில் பிரியா அணிந்திருந்த துப்பாட்டாவினாலே அவரது கழுத்தை இறுக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலை செய்யப்பட்ட பிரியாவின் உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.

தொடர்ந்து, அன்று இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் பிரியாவை நவீனும், கல்பனாவும் இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு சென்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 40 கி.மீ., தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகால் சிப்காட் பகுதி அருகேவுள்ள ஒரு காலி நிலத்தில் பிரியாவின் உடலை வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

கொலைசெய்யப்பட்ட பெண்
கொலைசெய்யப்பட்ட பெண்

இதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரியாவின் கணவன் நவீன் மற்றும் கல்பனா ஆகிய இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் கைது செய்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் ரூ.500 கள்ள நோட்டு கும்பல் கைது.. பரபரப்பு தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.