ETV Bharat / city

சென்னையில் ரூ.500 கள்ள நோட்டு கும்பல் கைது.. பரபரப்பு தகவல்கள்!

author img

By

Published : Apr 27, 2022, 4:50 PM IST

மணலி புதுநகரில் ஆட்டோ சீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ரூ.500 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து, அச்சடித்த கும்பலையும் போலீசார் கைது செய்தனர்.

கள்ள நோட்டுகள் பறிமுதல்
கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னை: மணலி புதுநகரில் கடந்த 12ஆம் தேதி வீடு ஒன்றில் சிலர் சண்டையிடுவதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்தவர்கள் கள்ள நோட்டுக்களை அச்சடிக்கும் கும்பல் எனத் தெரியவந்தது.

உடனடியாக அங்கிருந்த ரூ.16 லட்சம் அளவில் ரூ.200 கள்ள நோட்டுகள், 3 கலர் பிரிண்டர்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அங்கிருந்த யுவராஜ், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன்(33), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இம்தியாஸ்( 24), திருவொற்றியூர் தாங்கலை சேர்ந்த ஜான் ஜோசப்(31), வியாசர்பாடியைச் சேர்ந்த ரசூல்கான்(38), செங்குன்றத்தைச் சேர்ந்த முபாரக்(46) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மணலி புதுநகரில் ஆட்டோ சீட்டில் பதுக்கி
மணலி புதுநகரில் ஆட்டோ சீட்டில் பதுக்கி

இந்த நிலையில் யுவராஜ், இம்தியாஸ், ரசூல்கான் ஆகிய 3 பேர் முக்கிய குற்றவாளிகள் என்பதால் அவர்களை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இவர்கள் ஏற்கனவே அச்சடித்த ரூ.500 கள்ள நோட்டுகளை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஆட்டோ ஒன்றின் சீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மணலி புதுநகரில் ஆட்டோ சீட்டில் பதுக்கி
மணலி புதுநகரில் ஆட்டோ சீட்டில் பதுக்கி

பின்னர் உடனடியாக வண்ணாரப்பேட்டை பகுதியிலிருந்த ஆட்டோவை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஆட்டோ சீட்டுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ரூ.500 கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளையும், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெண் குரலில் பேசி ரூ.1.35 கோடியை சுருட்டிய மேட்ரிமோனி மோசடி ஆசாமி..!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.