ETV Bharat / state

விரைவில் அனைத்து கோவில்களுக்கும் குடமுழுக்கு!

author img

By

Published : Jan 8, 2021, 12:49 PM IST

ramachandran
ramachandran

காஞ்சிபுரம்: தமிழகத்தில் திருப்பணி முடிந்து 12 ஆண்டுகள் ஆன அனைத்து கோவில்களும் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் அலுவலகத்தை இன்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள கோவில்களில் பணிகள் சிறப்பாக நடக்கவும், புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும், புதிதாக 9 இணை ஆணையர் அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அதன்படியே இன்று காஞ்சிபுரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருப்பணி முடிந்து 12 ஆண்டுகளான அனைத்து கோவில்களும் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்” என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விரைவில் அனைத்து கோவில்களுக்கும் குடமுழுக்கு!

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறுக - பீட்டா கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.