ETV Bharat / state

'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஊழல்'

author img

By

Published : Nov 6, 2020, 6:08 PM IST

kallakurichi protest news
kallakurichi protest news

கள்ளக்குறிச்சி: சிறுவங்கூர் கிராமத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஊழல் செய்தாக முன்னாள் கிராம ஊராட்சி மன்ற துணை தலைவரிடம் நியாயம் கேட்க சென்ற ஒருவரை மூன்று பேர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவங்கூர் மற்றும் ரோடு மாமனந்தல் கிராமங்களில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் அனைத்து பொதுமக்களின் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு,தேசிய ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை சிறுவங்கூர் கிராம முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் தன் வசம் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றி ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த ஊழல் குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவரிடம் நியாயம் கேட்ட சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்றுள்ளார். அவரை அங்குள்ள மூன்று நபர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

இதில் படுகாயமடைந்த அந்த நபர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோடு மாமனந்தல், சிறுவங்கூர் கிராம மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணாக்கருக்கு மட்டுமே - முதலமைச்சர் திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.