ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை கடும் சரிவு

author img

By

Published : Apr 23, 2021, 2:14 PM IST

பூக்கள் விலை கடும் சரிவு
பூக்கள் விலை கடும் சரிவு

சத்தியமங்கலத்தில் கரோனா தொற்று காரணமாகப் பூக்கள் விலை கடுமையாகக் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக இப்பகுதியில் மலரா, சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளதால் தினந்தோறும் தோட்டத்தில் சாகுபடியாகும் பூக்களைப் பறித்து, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விவசாயிகள் ஏலம் விடுவது வழக்கமாக நடைபெறுகிறது.

அதுமட்டுமில்லாமல் அங்கு விளையும் பூக்கள் கேரளா, கர்நாடகத்துக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரோனா நோய் பரவல் காரணமாகக் கர்நாடகம், கேரளாவில் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பூக்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் பூ கடைகள் குறைந்த நேரத்தில் செயல்படுவதால் பூக்கள் விற்பனையும் சரிந்துள்ளது.

இதனால் பூக்கள் விலை கிலோ 455 ரூபாயிலிருந்து, 250 ரூபாயாக குறைந்துள்ளது. பூக்கள் வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விற்பனை மந்தமாக காணப்பட்டது. வரும் வாரங்களில் பூக்கள் விலை மேலும் சரியும் என்பதால் கோவை, சிறுமுகை பகுதியில் உள்ள வாசனைத் திரவியம் தயாரிக்கும் ஆலைகளில் பூ மார்க்கெட் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இன்றைய பூக்கள் விலை நிலவரம் மல்லிகை கிலோ ரூ.250, முல்லை ரூ.170, காக்கடா ரூ.200, செண்டுமல்லி ரூ.35, கனகாம்பரம் ரூ.280 சம்பங்கி ரூ.100 ஆக ஏலம் போனது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.