ETV Bharat / state

'மீத்தேன் திட்டத்திற்கு சி.ஆர். கமிட்டியில் மத்திய அரசு அனுமதி வாங்கித்தான் ஆக வேண்டும்' - அமைச்சர் கருப்பணன்

author img

By

Published : Feb 1, 2020, 10:14 AM IST

அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்ச் சந்திப்பு
அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்ச் சந்திப்பு

ஈரோடு: மீத்தேன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை கீழ் உள்ள சி.ஆர். கமிட்டியில் மத்திய அனுமதி வாங்கிதான் ஆக வேண்டும் என அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பங்கேற்றார். கவுந்தப்பாடி பகுதிக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம் மேல்நிலைப்பள்ளி உட்பட நான்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 603 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் கருப்பணன் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”மீத்தேன் திட்டத்தை மாநிலங்களில் செயல்படுத்த மாநில அரசிடம், மத்திய அரசு அனுமதி கேட்காவிட்டாலும், சுற்றுச்சூழல் துறை கீழ் உள்ள சி.ஆர். கமிட்டியில் அனுமதி வாங்கித்தான் ஆக வேண்டும். 500 டிடிஎஸ் மேல் இருக்கும் நீரைச் சுத்திகரிப்பு செய்யதான் ஈரோடு பவானி நகரங்களில் பொதுச் சுத்திகரிப்பு மையம் கொண்டு வரப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க...பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!

Intro:Body:tn_erd_05_sathy_kck_minister_vis_tn10009
tn_erd_05a_sathy_kck_minister_byte_tn10009

மீத்தேன் திட்;டத்திற்கு சுற்றுச்சூழல் துறை கீழ் உள்ள சிஆர் கமிட்டில் அனுமதி வாங்கி தான் ஆகவேண்டும்: அமைச்சர் கே.சி.கருப்பணன்

கோபிசெட்டிபாளைளயம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மீத்தேன் திட்;டத்திற்கு சுற்றுச்சூழல் துறை கீழ் உள்ள சிஆர் கமிட்டில் அனுமதி வாங்கி தான் ஆகவேண்டும் என்றும் 500 டிடிஎஸ் மேல் இருக்கும் நீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளயில் நடைபெற்ற மிதிவண்டிகள் வழங்ககும் விழாவில் பங்கேற்ற சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் கவுந்தப்பாடி பகுதிக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அய்யம்பாளையம் மேல்நிலைப்பள்ளி உட்பட நான்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 603 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருகிறது. அதனால் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்றும் படிப்பு என்றால் மட்டுமே பெரிய இலக்கை அடையமுடியும் என்றும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழத்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மத்திய அரசு மீத்தேன் திட்;டத்திற்கு மாநில சுற்றுச்சூழல்துறை அனுமதி கேட்கவில்லை என்றால் கூட சுற்றுச்சூழல் துறை கீழ் உள்ள சிஆர் கமிட்டில் அனுமதி வாங்கி தான் ஆக வேண்டும். 500 டிடிஎஸ் மேல் இருக்கும் நீரை சுத்திகரிப்பு செய்ய தான் ஈரோடு பவானி நகரங்களில் பொதுசுத்திகரிப்பு மையம் கொண்டு வரப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார். இவ்விழாவில் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமன் பவானி தாசில்தார் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.