ETV Bharat / state

'இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான நூல் வழங்குவதில் காலதாமதம்' - விசைத்தறி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

author img

By

Published : Aug 13, 2023, 12:37 PM IST

Updated : Aug 13, 2023, 12:56 PM IST

delay-in-providing-thread-for-free-vetti-and-saree-production-power-loom-workers-blame
`இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான நூல் வழங்குவதில் காலதாமதம் ’ விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டு !

இலவச வேஷ்டி, சேலை திட்டத்திற்கான நூல் வழங்குவதில் தமிழ்நாடு அரசு காலதாமதம் ஏற்படுத்தி வருவதாக விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இலவச வேஷ்டி, சேலை திட்டத்திற்கான நூல் வழங்குவதில் தமிழ்நாடு அரசு காலதாமதம் ஏற்படுத்தி வருவதாக விசைத்தறி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

ஈரோடு: தமிழ்நாடு அரசின் சார்பில் 1983ஆம் ஆண்டு முதல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அதன்படி தற்போது 2 கோடி அளவிளான வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்காக இந்த ஆண்டு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

இந்த திட்டத்திறக்கான பணிகள் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்செங்கோடு பள்ளிப்பாளையம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. உற்பத்தி செய்யபடும் நெசவாளர்களுக்கான நூலை அரசே வழங்கும்.

இந்தப் பணியானது ஆண்டுதோறும் ஜுலை மாதம் தொடங்கப்பட்டு, டிசம்பர் மாதம் நிறைவடைந்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு இதற்கான பணிகளை தொடங்கியதே தாமதமானது மட்டுமல்லாமல், தரமற்ற நூல்களையும் அரசு வழங்கியதாகவும், இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, சரியான நேரத்திற்கு பணிகளை முடிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் விசைத்தறி உரிமையாளர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விசைத்தறி உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால், இந்த ஆண்டு இலவச வேஷ்டி, சேலைக்கான பணிகள் முன்னதாகவே தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வரை இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இன்னும் நூல்களைக் கூட தராமல் தமிழ்நாடு அரசு இருந்து வருகிறது என விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆண்டுதோறும் ஜீலை மாதமே நூல்கள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு இருக்க வேண்டிய நேரத்தில், இன்னும் பணிகள் தொடங்காமல் இருந்து காலதாமதத்தை ஏற்படுத்தி வருவதால், இந்த ஆண்டு பொங்கலுக்குள் வேஷ்டி, சேலை என்பது பெரும் சாவாலாக இருக்கும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே மின் கட்டணம் உயர்வு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு விசைத்தறி கூடங்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு சிலர் விசைத்தறியை நடத்த முடியாமல் தொழிலை விட்டு முழுமையாக வெளியேறிவிட்டு விசைத்தறிகளை எடைக்கடைக்கு கொண்டு விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

அதேநேரம், மீதமுள்ள விசைத்தறி தொழிளாலர்கள் இலவச வேஷ்டி-சேலை திட்டம், பள்ளிச் சீருடைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை மட்டுமே நம்பி இருப்பதாகவும், எனவே தமிழ்நாடு அரசு இலவச வேஷ்டி, சேலை திட்டத்தின் மீது தனிக் கவனம் செலுத்தி உடனடியாக நூல்களை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : தோல் கழிவுகளால் பாழாகும் பாலாறு - அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக விவசாயிகள் வேதனை!

Last Updated :Aug 13, 2023, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.