ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லமண்டியில் நிறம் குறைவாக தரமற்ற முறையில் வெல்லம் வைத்திருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் கலைவாணி தலைமையில் சித்தோடு வெல்லமண்டியில் சோதனை நடத்தபட்டது. இதில் நிறம் குறைவாக இருந்த வெல்ல மாதிரிகளை சோதனையிட்டபோது வெல்லத்தில் கலப்படம் செய்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 3 டன் வெல்லத்தை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் பலமுறை இங்கு சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் கலப்படம் செய்தவர்கள் மீது நீதிமன்றம் மூலம் வழக்கு போடப்படும் என்றும் அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
வெல்லம் வெளிர் நிறமாக வருவதற்கு சர்க்கரை, மைதா போன்ற பொருட்களையும் ரசாயனங்களையும் கலப்பதாக தெரிவித்த அலுவலர்கள், இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கிடையே தகராறு - துப்பாக்கியால் மிரட்டியவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு