ETV Bharat / city

விவசாயிகளுக்கிடையே தகராறு - துப்பாக்கியால் மிரட்டியவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

author img

By

Published : Dec 7, 2019, 12:02 AM IST

கோவை: விவசாயிகள் இருவருக்கு இடையே நடைபெற்ற தகராறில் துப்பாக்கியை பயன்படுத்தி மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயி பயண்படுத்திய துப்பாக்கி
விவசாயி பயண்படுத்திய துப்பாக்கி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பொன்னயூர்பிரிவு போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சூரிய தர்ஷன் என்பவருக்கும் அவர்களின் தோட்டத்திற்குச் செல்லும் பொது வழித்தடம் குறித்து பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி சென்ற சக்திவேல் இருசக்கர வாகனத்தில், தனது தோட்டத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது சூரிய தர்ஷன் அவரை அவமதித்து, வாகனத்தின் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார். வாகனத்தின் சாவியைக் கேட்ட சக்திவேலிடம் வழித்தடத்தில் வரக்கூடாது என்று எச்சரித்த, சூரிய தர்ஷன் வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து சக்திவேலை மிரட்டினார்.

பொள்ளாச்சி காவல் நிலையம்

அப்போது துப்பாக்கியை மேல்நோக்கி இரண்டு முறை சுட்டும் உள்ளார். இதில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சக்திவேல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சூரிய தர்ஷனை காவல் துறையினர் கைது செய்தனர். பின் அவரிடம் இருந்த ஒற்றை குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறையினர், சூர்ய தர்ஷன் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

பழச் சிற்பங்களில் தலைவர்களின் உருவங்கள் - அசத்தும் மதுரை கலைஞர்

Intro:arrestBody:arrestConclusion:பொள்ளாச்சியில் விவசாய துப்பாக்கியால் சுட்ட வரை பொள்ளாச்சி தாலுகா போலீசார் கைது செய்தனர் பொள்ளாச்சி –6 பொள்ளாச்சி அடுத்த பொன்னயூர்பிரிவு போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் விவசாயி அவர் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சூரிய தர்ஷன் என்பவருக்கும் பொதுவான வழித்தடம் குறித்து ஏற்கனவே இருவருக்கும் பிரச்சினை இருந்து வருகிறது இந்நிலையில் இன்று சக்திவேல் பொள்ளாச்சி சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் தனது தோட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது சூரிய தர்ஷன் சக்திவேல் அவமதித்து வாகனத்தின் சாவியை எடுத்து சென்றுவிட்டார் சக்திவேல் வாகனத்தின் சாவியை கேட்ட பொழுது வழித்தடத்தில் வரக்கூடாது என்று எச்சரித்து வீட்டிற்கு சென்றவர் துப்பாக்கி எடுத்து வந்து சக்திவேலை மிரட்டினார் துப்பாக்கியை மேல்நோக்கி இரண்டுமுறை சுட்டு உள்ளர் எனகாவல்துறையினர் தெரிவித்தனர் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சக்திவேல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சூரிய தர்ஷன் ஜமீன் கொட்டாம்பட்டி பிரிவில் பஸ்நிலையத்தில் வைத்து கைது செய்தனர் பின் மிரட்டலுக்கு பயன்படுத்தியஒற்றை குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு 7 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர்,பொள்ளாச்சி Jm 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். போலீஸார் கூறும் பொழுது சூரிய தர்ஷன் தனது தந்தை செந்தில்வேல் அனுமதி பெற்று வைத்திருந்த துப்பாக்கி என விசாரணையில் தெரிய வருகிறது தனது தந்தையின் துப்பாக்கி அனுமதி இல்லாமல் எடுத்து மிரட்டி உள்ளதால் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாக தெரிவித்தனர் இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.