ETV Bharat / state

கணவரை கொலை செய்த மனைவி உள்பட 3 பேர் கைது

author img

By

Published : Oct 14, 2021, 8:38 PM IST

கணவரை கொலை
கணவரை கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல்: பழனியை அடுத்த பெருமாள்புதூரில் வசித்து வந்தவர் விவசாயி கருப்புசாமி (45). இவர் நேற்றிரவு (அக்.13) பெருமாள்புதூரிலுள்ள அவரது வீட்டின் முன்பு உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கருப்புசாமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கருப்புசாமி குடித்துவிட்டு அவ்வப்போது மனைவி, குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தது தெரியவந்தது. மேலும் கருப்புச்சாமி வேறு சிலபெண்களுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தெரிகிறது.

வாக்குவாதம்

இந்நிலையில் மனைவி மீனாட்சி கடந்த பத்து நாள்களுக்கு முன்பு கருப்புசாமியுடன் தகராறு செய்துவிட்டு அதே ஊரிலுள்ள தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால், நேற்று (அக்.13) மீனாட்சி அவரது அண்ணன் ராஜேந்திரன், உறவினர் சத்திசிவம் ஆகிய மூவரும் கருப்புசாமியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

கைது - விசாரணை

இதில் மீனாட்சி, ராஜேந்திரன், சக்திசிவம் ஆகியோர் தாக்கியதில் கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மீனாட்சி, ராஜேந்திரன், சக்திசிவம் ஆகிய மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை - தீக்குளித்த கர்ப்பிணி; கருவிலிருந்த சிசுவும் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.