ETV Bharat / state

'10% இட ஒதுக்கீடு மாபெரும் துரோகம்' -வேல்முருகன்

author img

By

Published : Feb 1, 2019, 1:41 PM IST

வேல்முருகன்

திண்டுக்கல்: உயர் வகுப்பு மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது என்பது மாபெரும் துரோகம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்தேயாக பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

10 சதவீத இட ஒதுக்கீடு:

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "மத்திய அரசு வழங்கி உள்ள 10 இட ஓதுக்கீடு உத்தரவு என்பது மாபெரும் சமூக அநீதியாகும். சமமான சமூகம் என்பது பொருளதாரத்தால் நிர்ணாயிக்க முடியாது. ஏனெனில் 2000 ஆண்டுகளாக தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என சமூகத்தால் ஒடுக்கப்படும் மக்களின் சாதி இழிவுப் பட்டம் எந்த காலத்திலும் போகாது, இன்றளவும் அவர்கள் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்டும் இழிவாக நடத்தப்பட்டும்தான் வருகிறார்கள். அவர்கள் சமுக நீதி, கல்வி பெறுவதற்குதான் நம் முன்னோர்கள் இடஒதுக்கீட்டு உறிமையை போராடி பெற்றுத் தந்தார்கள். இந்திய நாட்டின் உயரிய பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்நிலையில் உயர்வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது என்பது மாபெரும் துரோகம்" என்று தெரிவித்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிவிப்புப் பலகைகள் வேண்டுமானால் விளம்பரத்திற்கு நிற்கலாமே தவிர நாட்டு மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. மேலும், திமுக காலத்திலேயே அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இதில் இரண்டாம் முறை அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக நிகழ்ந்த அரசியல் நாடகம்.

மேலும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருது குறித்தும் மொழி அடிப்படையில் செய்யப்படும் அரசியல் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வேல்முருகன் பதில் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நமது ஈடிவி பாரத் திற்கு அளித்த பிரத்தேயாக பேட்டி.

1.   10% சதவீத இட ஒடுக்கிட்டினால் பாஜக அரசு சமூக நீதியை சீர்க்குலைக்கிறதா?

மத்திய அரசு வழங்கி உள்ள கல்வி மற்றும் பணியில் 10 இட ஓதுக்கீடு உத்தரவு என்பது மாபெரும் சமூக அநீதியாகும். சமமான சமூகம் என்பது பொருளதாரத்தால் நிர்ணாயிக்க முடியாது. ஏனெனில் 2000 ஆண்டுகளாக தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என சமூகத்தால் ஒடுக்கப்படும் மக்களின் வாழ்க்கை கல்வி மற்றும் பணி முன்னேற்றம் மூலமாக மாற்றப்பட்டு விட்டதா? இன்றளவும் அவர்கள் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்டும் இழிவாக நடத்தப்பட்டும் தான் வருகிறார்கள். அவ்வாறான சிறுபான்மை, மக்களின் அடையாளம் எக்காலத்திலும் அழியாமல் அவர்களை பின்தொடர்கிறது. இந்நிலையில் உயர்வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது மாபெரும் துரோகம்.

2. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிவிப்பு பலகைகள் வேண்டுமானால் விளம்பரத்திற்கு நிற்கலாமே தவிர நாட்டு மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மேலும், திமுக காலத்திலேயே அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இதில் இரண்டாம் முறை அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் ஓட்டை பெறுவதற்காக நிகழ்ந்த அரசியல் நாடகம்.

3. நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் சித்தாந்த அடிப்படையில் வழங்கப்படுகிறதா?

ஆம், பெரும்பாலும் பத்ம விருதுகள் அரசியல் கட்சிகளின் சித்தாந்த அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் கொள்கைகளை ஆதரித்து அதனை மக்களிடையே கொண்டு சேர்க்க உதவும் அறிவு ஜீவிக்களுக்கு தான் நாட்டின் உயரிய விருதினை அரசு பரிசாக அளிக்கிறது. மத்தியில் எந்த அரசு ஆட்சி இருந்தாலும் இந்த நிலைதான் தொடர்கிறது. இதில் விதிவிலக்காக ஆத்திப்பூத்தாற் போல் ஒரு சில தகுதியான நபர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.  

4. வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் எனக் கூறிவிட்டு ஸ்டர்லைட் ஆலையை மூட வேண்டும் எனக் கூறுவது எதனால்?  

எந்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தொழிற்சாலைகள் திறக்கப்படுகிறதோ அவர்களிடம் கருத்துக்கணிப்பு மற்றும் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள். எங்களுக்கு நன்மை கிடைக்கும் என அப்பகுதி மக்கள் ஒத்துக்கொண்டால் தாராளமாக ஸ்டர்லைட் ஆலையை தொடங்கட்டும். ஆனால் மண், காற்று மற்றும் நீர் ஆகிய மூன்றிக்கும் பாதிப்பில்லாத பாதுக்காப்பான ஆலையாக செயல்பட வேண்டும். மேலும், இதர மாநிலங்களால் விரட்டப்படும் ஆலைகள் தான் தமிழகத்தில் தஞ்சமடைக்கின்றன. இதை எப்படி ஏற்று கொள்ள முடியும். அதனால் தான் ஸ்டர்லைட்டை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.

5. தமிழ் மொழியின் பெயரில் செய்யப்படும் அரசியலால் தமிழ் மக்கள் ஹிந்தி மட்டுமின்றி மற்ற மொழிகளை கூட அதிகம் கற்பதில்லை. மொழி என்பது ஒர் சமூகத்தின் வாழ்வியலை அறிய உதவும் கருவி. அதை மறுக்கமுடியுமா?

உலகத்தின் எல்லா நாடுகளிலும் அவரவர் தாய்மொழியில் தான் கல்வி பயில்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் தாய் மொழியை கற்காமலேயே ஆராய்ச்சி கல்வி வரை பயில முடியும் என்றால் அதை எப்படி ஏற்க முடியும். நாங்கள் எந்த மக்களையும் பிற மொழிகளை கற்க வேண்டாம் என கூறியது கிடையாது. நாம் தாய்மொழியை கற்றபின்னர் உங்களுக்கு விருப்பமான உலக மொழி அத்தனையும் கூட படியுங்கள். நம் தாய்மொழியை விடுத்து பிற மொழிகளை மட்டும் கற்பது தவறு என்று தான் கூறுகிறோம். எனவே இது மொழி வெறியல்ல, மொழி உரிமை.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.