ETV Bharat / state

palani: பழனியில் தைப்பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

author img

By

Published : Jan 15, 2023, 12:33 PM IST

பழனியில் தைப்பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
பழனியில் தைப்பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

palani:பழனியில் தைப்பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மலைக்கோயிலுக்கு படியேறி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டம் காரணமாக, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் மூன்று மணி நேரமானது.

பழனியில் தைப்பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

palani:திண்டுக்கல்: தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதைக்கு வந்து கிரிவலம் சென்றனர். முருகப்பக்தர்கள் மட்டுமன்றி, ஏராளமான ஐயப்ப பக்தர்களும் சுவாமி தரிசனத்துக்காக, பழனி மலைக்கோயிலுக்காக வந்திருந்தனர். அதிகாலை நான்கு மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

மலைக்கோயிலில் கட்டண தரிசன வரிசை மற்றும் இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் மூன்று மணி நேரமானது. தை மாதப் பிறப்பை முன்னிட்டு அருள்மிகு ஆனந்த விநாயகருக்கு சிறப்பு தனூர் யாகபூஜை நடத்தப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது.

பொங்கல் திருவிழா கூட்டம் காரணமாக, கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை செய்திருந்தனர்.

இதையும் படிங்க: Palani kumbabishekam: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளணுமா? இதைப்படிங்க

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.