பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் வெட்டிக் கொலை

author img

By

Published : Sep 22, 2021, 5:20 PM IST

பெண் வெட்டிக் கொலை

திண்டுக்கல் அருகே பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணை வெட்டிக் கொலை செய்து, தலையை துண்டாக்கிய சம்பவ குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்: பழைய கரூர் சாலையில் அமைந்துள்ள நந்தவனப்பட்டியில் 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனரான பசுபதி பாண்டியன் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களிள் மூவர் இறந்துவிட்டனர். இதனால், மீதமுள்ள 15 பேர் மீதான வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பெண் வெட்டிக் கொலை

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியான நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி (60) என்பவரை இன்று (செப்.22) அடையாளம் தெரியாத நபர்கள் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனி டேவிட் நகர் அருகே வைத்துக் கொலை செய்தனர். மேலும், அவரது தலையை வெட்டி எடுத்துச் சென்று பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு போட்டுவிட்டுச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் துறையினர், நிர்மலா தேவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நிர்மலா தேவியின் தலையையும் எடுத்துச் சென்றனர்.

பெண் வெட்டிக் கொலை

பழிக்குப்பழியாக நடந்த கொலை

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆய்வு மேற்கொண்டார். பசுபதி பாண்டியன் கொலை தொடர்பாக பழிக்குப்பழிக்காக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நிர்மலா தேவியை கொலை செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒட ஒட கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் - திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.