ஒட ஒட கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் - திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

author img

By

Published : Sep 19, 2021, 6:25 AM IST

cctv footag  auto driver murder  murder case  murder issue  thoothukudi auto driver murder  thoothukudi news  thoothukudi latest news  ஆட்டோ டிரைவர் கொலை  கொலை வழக்கு  தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை  சிசிடிவி காட்சிகள்  கொலை

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி: டி.எம்.பி காலனியை சேர்ந்தவர் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்கிறார். இவரும் தொம்மையார் காலனியை சேர்ந்த ஆறுமுகம் (31), அவரது தம்பி சொர்ணராஜ் (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.

இவர்கள் 3 பேரும் தினசரி தூத்துக்குடி சிதம்பர நகர் அருகே உள்ள மைய வாடியில் வைத்து மதுபானம் குடிப்பது வழக்கம்.

ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள்
வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் 3 பேரும் வழக்கம்போல் மையவாடி அருகில் உள்ள எம்ஜிஆர் பூங்கா முன்பு உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர்.
போதை அதிகம் ஆனதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுமுகம் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவபெருமாளை விரட்டி விரட்டி சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‌

இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், அவரது தம்பி சொர்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க:சீர்காழியில் பசுவை வெட்டிய இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.