ETV Bharat / state

'கொடைக்கானல் காவல் நிலையத்திற்குக் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்' - டிஜிபி திரிபாதி

author img

By

Published : Jan 17, 2020, 11:57 AM IST

kodaikanal
kodaikanal

திண்டுக்கல்: கொடைக்கானல் காவல் நிலையத்திற்குக் கூடுதல் காவல் துறையினர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி கூறியுள்ளார்.

கொடைக்கானல் நகரில் உள்ள காவல் நிலையம், காவலர் குடியிருப்புகள், மகளிர் மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தையும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி நேரில் பார்வையிட்டார். அவருடன் டிஎஸ்பி ஆத்மநாதன், ஆய்வாளர் ராஜசேகர் உள்பட காவல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி, 'கொடைக்கானல் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாக கூடுதல் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல பூம்பாறை கிராமத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பணியில் உள்ள காவலர்களுக்கு குடியிருப்பு வசதி குறைவாக உள்ளது. மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஆய்வுமேற்கொண்ட டிஜிபி திரிபாதி

மேலும், மலைப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போக்குவரத்து ஆய்வாளர் பதவி நியமிக்க ஏற்பாடு செய்ய திட்டமிட்டுளோம்' என்று கூறினார்.

இதையும் படிங்க: போலீஸ் வாகனத்தில் டிக் டாக் செய்த சிறுவர்கள் - காவல்துறை அளித்த வினோத தண்டனை!

Intro:திண்டுக்கல் 17.1.20

கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசார் விரைவில்
நியமிக்கப்படுவார்கள் என தமிழக காவல்துறை இயக்குநர் திரிபாதி கூறியுள்ளார் .

Body:கொடைக்கானல் நகரில் உள்ள காவல் நிலையத்தையும் காவலர் குடியிருப்புகள்,
மகளிர் மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தையும் தமிழக காவல்துறை இயக்குநர் டிஜிபி திரிபாதி நேரில் பார்வையிட்டார். அவருடன் டிஎஸ்பி
ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவல்துறை
இயக்குநர் திரிபாதி,
கொடைக்கானல் காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை இருப்பது
குறித்து தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாக கூடுதல்
காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பூம்பாறை கிராமத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கவும் நடவடிக்கை
எடுக்கப்படும். இங்கு பணியில் உள்ள காவலர்களுக்கு குடியிருப்பு வசதி
குறைவாக உள்ளது. மகளிர் காவல்நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாதநிலை உள்ளது. இது குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை
எடுக்கப்படும்.

மேலும், மலைப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதவி நியமிக்க ஏற்பாடு செய்ய திட்டமிட்டுளோம் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.