ETV Bharat / state

பழனி அரசு மருத்துவர் வீட்டில் கொள்ளை: குற்றவாளி சிக்கியது எப்படி?

author img

By

Published : Apr 20, 2023, 1:42 PM IST

palani
பழனி அரசு மருத்துவர் வீட்டில் கொள்ளை

பழனியில் மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பழனி அரசு மருத்துவர் வீட்டில் கொள்ளை: குற்றவாளி சிக்கியது எப்படி?

திண்டுக்கல்: உதயகுமார் என்பவர் பழனி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் பழனி அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். மருத்துவர் உதயகுமாரின் மகள் சென்னையில் மருத்துவ மேற்படிப்பு படிப்பதால், அவரை காண மருத்துவரின் மனைவி சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்.14 ஆம் தேதி மருத்துவர் பணியை முடித்து விட்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். உதயகுமார் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த 3 மர்மநபர்கள், அதிகாலை அவர் தூங்கும் நேரத்தில் முகமுடி அணிந்து வீட்டிற்குள் வந்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் சென்ற அவர்கள் தூக்கத்தில் இருந்த உதயகுமாரை எழுப்பியுள்ளனர். அப்போது உதயகுமார் அதிர்ச்சியடைந்து, பயத்தில் கூச்சலிட முயற்சி செய்துள்ளார்.

அதையறிந்த கொள்ளையர்கள் உதயகுமாரை கத்தியால் தாக்கி, கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் லாக்கரில் வைத்திருந்த 100 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்கள் சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து மருத்துவரின் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். அப்போது மருத்துவர் இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்த பின் உதயகுமாரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் உதயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பழனி நகரக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பம் தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவரை விசாரித்ததில் கிடைத்த தகவல் மற்றும் போலீசாருக்கு கிடைத்த தடயங்கள், சிசிடிவி காட்சி தகவலின் அடிப்படையில் பழனியைச் சேர்ந்த சரவணன் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் தீவிர விசாரணையில் சரவணன் கொடுத்த தகவலின் பெயரில் மருத்துவர் உதயகுமார் வீட்டில் நுழைந்து கொள்ளையடித்தது யார் என்ற உண்மை தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சரவணன் ஏற்கனவே பல முறை கார், பைக்குகளை திருடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். மருத்துவரின் வீட்டில் ஆள் இல்லாததையும், அவர் வீட்டில் அதிகம் பணம், நகை இருக்கும் என்பதையும் அறிந்த அவர் கொள்ளை திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அந்த திட்டத்திற்காக சரவணன் சிறையில் இருந்த போது பழகிய திண்டுக்கலை சேர்ந்த கூட்டாளி ஒருவருக்கு இந்த தகவல் கூறியுள்ளார்.

மேலும் அந்த நபருடன் வந்த சிலருடன் சேர்ந்து மருத்துவர் வீட்டில் நுழைந்து கொள்ளையடித்ததும், எங்கே மாட்டிக் கொள்ளுவோமோ என்ற பயத்தில் மருத்துவரை தாக்கியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கொள்ளையடித்த நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ள மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்ட சரவணிடம் இருந்து சுமார் 34 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி மற்றும் ரூ.7 லட்சம் பணம் மற்றும் 1 கார், 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சரவணனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, தற்பொது சிறையில் அடைத்துள்ளர். தலைமறைவாகியுள்ள மற்ற குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் தாயை அடித்த நபரை கொடூரமாக தாக்கிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.