ETV Bharat / state

உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் - அண்ணாமலையை சீண்டிய தருமபுரி எம்.பி.!

author img

By

Published : May 13, 2023, 5:07 PM IST

அண்ணாமலைக்கு தர்மபுரி எம்பி முகநூல் பதிவு.
அண்ணாமலைக்கு தர்மபுரி எம்பி முகநூல் பதிவு.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில்குமார் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்வி குறித்தும்; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் தன் கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகி வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை எண்ணிக்கையோடு, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சியினர் வெற்றியைப் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் திமுகவை சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில்குமார், பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவிற்காக கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ததை சுட்டிக்காட்டி பகடி செய்துள்ளார்.

இதுகுறித்து, தனது முகநூல் பக்கத்தில் அவர், "நம்ம ஆளு பிரசாரம் செய்த தொகுதியில் 10 வாக்குகள் தான் விழுந்தன என்பது தவறு. நான்கு வாக்குகள் தான் விழுந்ததாம்... சோ மீண்டும்... இன்றைய பழமொழி.. உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம்" என்ற பழமொழியைப் பதிவிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அனைவராலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் - கே.எஸ். அழகிரி பூரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.