தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி நில அபகரிப்பு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு சார்பில் நில அபகரிப்பு தொடர்பான மனு பெரும் நிகழ்ச்சி இன்று (அக்.29) நடைபெற்றது.
பொதுமக்கள் தங்களது நில ஆக்கிரமிப்பு குறித்து புகார்களை மனுவாக அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பெறக்கூடிய மனுக்கள் குறித்து விசாரணை வேகமாக நடைபெற்று, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் நில அபகரிப்பு பிரிவு தடுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் புஷ்பராஜ், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் விஜயராகவன், காவல் ஆய்வாளர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், 50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அதிக அளவில் புகார் மனுக்கள் அளிக்க வந்தனர்.