ETV Bharat / state

தர்மபுரியில் ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு

author img

By

Published : Apr 24, 2021, 5:32 PM IST

தர்மபுரி செய்திகள்
தர்மபுரி செய்திகள்

தர்மபுரி: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தர்மபுரி, அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அவ்வை வழி ரயில்வே கேட் அருகே ரயில் பாதையில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்துகிடந்தார்.

இதையடுத்து, அவர் காலை 5 மணிக்குச் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என ஏ. ஜெட்டிஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராசு தர்மபுரி ரயில்வே காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில், தர்மபுரி ரயில்வே துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.

இறந்தவர் யார்?

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நபா் யார், எந்த ஊரைச் சோ்ந்தவா் எனக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.