ETV Bharat / state

தருமபுரியில் சரக்கு மினிலாரி விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

author img

By

Published : Feb 28, 2023, 8:09 PM IST

சரக்கு மினிலாரி விபத்து- 1 நபர் பலி, 40 பேர் படுகாயம்!
சரக்கு மினிலாரி விபத்து- 1 நபர் பலி, 40 பேர் படுகாயம்!

பாலக்கோடு அருகே சரக்கு மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 1 நபர் உயிரிழந்துள்ளார். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி பாலக்கோடு அருகே கண்டகபைல் மலைக்கிராமத்திலிருந்து பாலக்கோட்டில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, திரும்பும்போது மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து, நிலைத்தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்தது. இவ்விபத்தில் சென்னசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (60) என்பவர் உயிரிழந்தார்.

மேலும் வாகனத்தில் வந்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று பின்பு தருமபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது ஏற்பட்ட விபத்து கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.