ETV Bharat / state

சென்னையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்?

author img

By

Published : Feb 28, 2023, 7:08 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் போரூர், ஆழ்வார்திருநகர், பெரம்பூர் பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை: நாளை (மார்ச் 1) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், ஆழ்வார்திருநகர், பெரம்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

போரூர்: மாங்காடு நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாசிலாமணி நகர், சார்ல்ஸ் நகர், கொழுமணிவாக்கம் பகுதி, ராஜீவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே. நகர், அலெக்ஸ் நகர், முத்துகுமரன் கல்லூரி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

ஆழ்வார் திருநகர் : திருவள்ளுவர் சாலை மெயின் ரோடு, வீரப்பன் நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, ஜானகி நகர், அண்ணா தெரு, ராஜாஜி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

பெரம்பூர்: பெரியார் நகர், ஜி.கே.எம் காலனி முழுவதும், எஸ்.ஆர்.பி காலனி, பேப்பர் மில்ஸ் சாலை, பூம்புகார் நகர் முழுவதும், ராஜாஜி நகர், பார்த்திபன் தெரு, காமராஜ் தெரு, ஜானகி ராம் காலனி ஐ.சி.எப் முத்தமிழ் நகர் 4 மற்றும் 5-வது பிளாக் பகுதி, சென்னை பாட்டையா ரோடு, தெற்கு மாட வீதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு வளர்ச்சி அடைகிறது - பொடி வைத்து பேசிய துணை குடியரசுத்தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.