கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கியது திருவள்ளுவர் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போது பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, இன்று இளங்கலை வேதியியல் பயிலும் ஐந்தாம் பருவ மாணவர்களுக்கு பிசிகல் கெமிஸ்ட்ரி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் பெரும்பாலானவை ஆறாம் பருவ பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
இதில், 2 மதிப்பெண் கொண்டதில் 4 வினாக்களும் 5 மதிப்பெண் கொண்டதில் 2 வினாக்களும் 10 மதிப்பெண் கொண்டதில் 2 வினாக்களும் என ஆறாம் பருவ தேர்வு தொகுப்பிலிருந்து இடம்பெற்றுள்ளது. மேலும், கேள்வி எண் 7-10, 14-15, 19-20 ஆகியவை வேறு பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதேபோன்று கடந்த முறை நடைபெற்ற தேர்விலும் வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெரியார் பல்கலை. ஆன்லைன் தேர்வில் குளறுபடி: மாணவர்கள் தவிப்பு