ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா

author img

By

Published : Dec 21, 2021, 9:11 AM IST

சிதம்பரம் நடராஜர்
சிதம்பரம் நடராஜர்

மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு பூஜைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்த நிலையில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

நேற்று டிசம்பர் 20 ஆம் தேதி, காலை நடராஜர் சிவகாமி சுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம், லட்சார்ச்சனை, திருவாபரண அலங்காரம், சித்சபை ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழாவில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள்

அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபம் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது கோயிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து நடராஜரை வழிபட்டனர்.

வழக்கமாக நடராஜர் கோவில் தரிசன விழா மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு மாலை 6 மணிக்கு மேல்தான் தரிசனம் நடந்தது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உணவு, இயற்கை உபாதை கழித்தல் போன்றவற்றிற்காக கடும் அவதிப்பட்டனர்.

இதையும் படிங்க: Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 21

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.