ETV Bharat / state

சாவை முத்தமிட்டு திரும்பிய இளைஞர்கள்: பேருந்து சக்கரத்துக்குள் சிக்கும் ஷாக்கிங் சிசிடிவி காட்சி

author img

By

Published : Feb 12, 2020, 7:14 PM IST

cctv
cctv

கோவை: காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தலைக்கவசம் அணிந்திருந்ததால் இளைஞர்கள் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கோவை மாநகர் காந்திபுரத்தில் அமைந்துள்ள நகரப் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்துசெல்வது வழக்கம்‌. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி கோவை கிராஸ்கட் சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் அரசுப் பேருந்து ஒன்று நுழைய முற்பட்டபோது, அப்பேருந்தின் சக்கரத்தின் கீழ் இருசக்கர வாகனம் சிக்கி விபத்து ஏற்பட்டது.

பேருந்தின் அருகில் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தைக் கவனிக்காத பேருந்து ஓட்டுநர், பேருந்து நிலையத்துக்குள் திரும்ப முற்பட்டபோது எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நடந்தது.

பேருந்து சக்கரத்துக்குள் சிக்கிய இளைஞர்கள் நூலிழையில் உயிர்பிழைப்பு

பின்னர் உடனடியாகப் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரும் சகபயணிகளும் இறங்கி விபத்துக்குள்ளான இருவரையும் மீட்டனர். இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்ததாலும் பேருந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாகப் பேருந்தை நிறுத்தியதாலும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து காட்டூர் போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'டெப்போ ஃபுல்' பேருந்தை கன்டெய்னர் மீது பார்க் செய்த ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.