ETV Bharat / state

ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

author img

By

Published : Oct 7, 2020, 2:48 PM IST

ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தண்ணீரை திறந்துவைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று (அக். 07) மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீரை திறந்துவைத்தார். பின்னர் அவர், 80 நாள்களுக்கு 2,548 மி. கனஅடி நீர் திறக்கப்படும் என்பதால் 22 ஆயிரத்து 116 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் எனத் தெரிவித்தார்.

ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் வைத்தியநாதன், பொதுப்பணித் துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.