ETV Bharat / state

"தமிழ்நாட்டில் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானிய பயிர்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்!

author img

By

Published : May 24, 2023, 4:24 PM IST

Updated : May 25, 2023, 1:13 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாட்டில் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்படுவதாகவும், 38.2 மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.

இதனை, தமிழ்நாடு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். சிறுதானிய கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "கண்காட்சியில் புதிய ரக சிறு தானியங்கள், விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறு தானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் பயரிட ஊக்கவிக்கப்பட்டு வருகிறது. 10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்படுகிறது. 38.2 மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் புதிய பயிற்சியை மேற்கொள்ள ஆராய்ச்சி மாணவர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இந்த திட்டம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சிறு தானிய வளர்ச்சிக்காக தரமான விதைகள் உள்ளிட்ட செயல்பாட்டிற்காக 82 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடையேயும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும்" என்றார்.

இதனையடுத்து நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை சார்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.

இதையும் படிங்க: "அதிமுகவுடன் கைகோர்ப்பேன்" - திருமாவளவன் கூறிய காரணம்...

Last Updated :May 25, 2023, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.